பதவிப் பித்தர்கள்!
மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி தன்னைக் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொலைபேசியில் அழைத்துப் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அப்படி விலகாவிட்டால் பதவியிலிருந்து அகற்றப்படுவேன் என்று தெரிவித்ததாகவும் உத்தரகண்ட் ஆளுநர் அஜீஸ் குரோஷி குற்றம் சாட்டியதுடன் நிற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் தனது ஆளுநர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.








