பல்கலைக்கழகங்களில் விதிமுறைக்கு மாறாக பணி நியமனங்கள் செய்வது, மத்திய, மாநில அரசு தரும் நிதியில் முறைகேடு செய்வது என்று பல வகையிலும், தாங்கள் இப்பதவிக்கு கொடுத்த விலையைக் காட்டிலும் பல மடங்கு மீட்டெடுக்கும் நடவடிக்கைக்குத்தான் இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று பரலவாகப் பேசத் தொடங்கிவிட்ட நிலைமை. இன்றைய நவீன உலகில் மாணவர்களின் திறன் எத்தகையது, அவர்களுக்குத் தேவையான உயர்கல்வி எத்தகையதாக, என்ன பாடத்திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று சரியாக மதிப்பீடு செய்ய துணை வேந்தர்கள் மற்றும் சிண்டிகேட், அல்லது பாடதிட்டக் குழு உறுப்பினர்களுக்கு நேரமும் இல்லை, ஆர்வமும் இல்லை. பேராசிரியர்களுக்கானால் அவர்களது உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தவே நேரம் போதவில்லை!