ஏப்ரல் 30, 2010-ஆம் ஆண்டு நடந்த மாச்சில் என்கவுன்டர் நிகழ்வு மிகவும் வருந்தத்தக்க ஒன்று. காஷ்மீர் மாநிலம், பாராமுலா மாவட்டத்தைச் சேர்ந்த நதிஹால் கிராமத்து இளைஞர்களான ரியாஸ் அகமது, முகம்மது ஷாபி, ஷாசத் அகமது மூவரையும் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, பஷீர் அகமது லோன் என்பவரும் நண்பர்களும் மாச்சிலுக்கு அழைத்துச் சென்றனர். அந்த மூவரையும் தீவிரவாதிகள் என்று ராணுவத்தினரிடம் பொய் கூறி, தீவிரவாதிகளைப் பிடித்துக் கொடுத்ததற்காகத் தலைக்கு 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டனர். தீவிரவாதிகளை அடையாளம் காட்டுபவர்களுக்கும், பிடித்துக் கொடுப்பவர்களுக்கும் எந்தக் கேள்வியோ விசாரணையோ இல்லாமல் தலைக்கு 50,000 ரூபாய் ராணுவம் அளிக்கிறது என்பதே அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.