இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மாதத் தொடக்கத்தில் நாகாலாந்து மாநிலம் உருவான பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றது, வடகிழக்கு மாநிலங்களின் உணர்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி இருப்பதற்கான அறிகுறியாகத் தெரிகிறது. அதிலும் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றபின், கடந்த 16 மாதங்களில் அஸ்ஸாம், நாகாலாந்து மாநிலங்களுக்கு இரண்டு முறையும், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு எல்லாம் ஒரு முறையும் விஜயம் செய்திருக்கிறார். விரைவிலேயே மிசோரத்திற்கும் விஜயம் செய்துவிட்டால், அவரது வடகிழக்கு மாநில சுற்றுப்பயணம் முழுமையடையும்.