முறையாக தேர்தல் நடத்தப்பட்டபோதெல்லாம், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்து வரும் காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் இதுவரை எந்தவொரு ஆட்சியும் பூர்த்தி செய்யவில்லை. முறையான சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற எந்த வளர்ச்சிப் பணிகளும் காஷ்மீரில் நடக்கவில்லை. வளர்ச்சிப் பணிகள் முறையாக முடுக்கி விடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளும், உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட்டால், காஷ்மீரின் நிலைமை நிச்சயமாக மாறும். காஷ்மீருக்கான கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒதுக்கிக் கொள்கிறார்கள். இதுதான் நிஜ நிலைமை.