சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மருமகள் மெச்சிய மாமியார்!

தான் கோபப்பட்டுப் பேசினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று தனது மாமியாரை மெச்சுகிறார் மருமகள் கார்த்திகா . 

News image
மாமியார் சாவித்திரியுடன், மருமகள் கார்த்திகா.
Updated On :6 பிப்ரவரி 2024, 12:44 pm

சோ.தெஷ்ணாமூர்த்தி

தான் கோபப்பட்டுப் பேசினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று தனது மாமியாரை மெச்சுகிறார் மருமகள் கார்த்திகா . 

மாமியார் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடியைச் சேர்ந்த, கார்த்திகா தனது மாமியார் சாவித்திரி குறித்துக் கூறியதாவது: 

நாங்கள் ஒருவரையொருவர் விரும்பி, மிகுந்த எதிர்ப்புடன் ஆதரவற்ற நிலையில்தான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், முதலில் எனக்கு முழுமையான தைரியத்தையும், ஆதரவையும் வழங்கியவர் எனது மாமியார்தான்.

என் கணவருக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். என்னை தன் மகள் போலத்தான், என் மாமியார் பார்த்துக் கொள்வார். வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இங்கேயும் இருந்து வருகிறேன். நான் என்ன சொன்னாலும் என் மாமியார் கேட்பார். எனது அம்மாவிடம் எப்படி பேசுவேனோ, அப்படித்தான் என் மாமியாரிபமும் பேசுவேன்.

நான் கோபமா இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, என் அம்மாவிடம் பேசுவது போலத்தான் பேசுவேன். பழகுவேன். நான் கோபப்பட்டால் கூட, என் மாமியார் கோபித்துக்கொள்ள மாட்டார். என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிடுவேன். எங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பேசிக் கொள்வோம். நான் கருவுற்று இருந்த நேரத்தில், எனது துணிகளை துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் எனது மாமியார்தான் செய்வார்கள். எனக்கு உடம்பு சரியில்லை என்றால் அழுதுவிடுவார். என்னுடைய அம்மா என்னிடம் எப்படி இருப்பாரோ அப்படியே என் மாமியாரும் இருக்கிறார். அந்தவகையில் நான் மிகவும் பாக்கியசாலி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.