சுரேஷ் டெண்டுல்கர் குழு அறிக்கை
நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்த, சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியானது கடந்த 2009-ல் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், தற்போது வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படு வருகின்றன. அதன்படி நகரங்களில் நாள் ஒன்றுக்கு உணவு உள்ளிட்ட தேவைக்கு, 33.33 ரூபாய்க்கும், கிராமப் புறங்களில், 27.20 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்பவர்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாக வரையறுக்கப்பட்டனர். இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும், என பல தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். திட்ட குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பிரமாண பத்திரத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்பொழுது நிதி ஆயோக் குழு பரிசீலித்து வருகிறது.