என் பெற்றோர் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு என்னைப் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. நான் வளர்ந்தேன், திருமணம் செய்து கொடுத்தார்கள். சில வருடங்களில் என் பெற்றோர் இறந்தனர். அவர்களைத் தொடர்ந்து கணவரும் இறந்து விட்டார். பிறகு நான் மட்டும் இரவுகளில் தூக்கமின்றி யோசித்துக் கொண்டிருப்பேன். இத்தனை வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும், நான் படிப்பறிவற்றவளாகவே இருக்கிறேனே? இனியும் கூட சாகும் வரை நான் படிப்பறிவற்றவளாகவே தான் இருக்கப் போகிறேனா? என்று யோசித்துக் கொண்டிருப்பேன். என்றாவது ஒருநாள் என்னால் என் பெயரை எழுத முடியுமா? பெயரெழுதி வாசிக்க முடியுமா? என்று யோசித்துக் கொண்டே படுத்திருப்பேன். அந்த தவிப்புக்கு ஒரு முடிவு வந்தது. ஹங்கர் புரஜெக்ட்டின் வயது வந்தோர் கல்வித் திட்டம் (அடல்ட் லிட்ரஸி) என் ஊருக்கும் வந்தது. அதைப் பற்றித் தெரிந்து கொண்டதுமே உடனடியாக நான் என் பெயரை அதில் பதிவு செய்து கொண்டேன். தினமும் தவறாமல் வகுப்புகளுக்குச் சென்றேன். இதோ இரண்டு நாட்களுக்கு முன் நான் தேர்ச்சியடைந்து விட்டேன் என்று தகவல் வந்தது. ஆமாம், இப்போது நான் எழுதப் படிக்கத் தெரிந்தவள் என்று சான்றிதழ் பெற்று விட்டேன். சான்றிதழைக் கையில் வாங்கியதும் நான் ஏதோ வேற்று வேற்று நாட்டில் இருப்பவளைப் போல உணர்ந்தேன். அந்த அழகான வேற்று நாட்டில் முழுக்க முழுக்க சந்தோஷமும், கோலகலமும் மட்டுமே நிறைந்திருந்தது. அதனால் தான் என்னுடைய பழைய ஷூக்கள் கூட இன்று டான்ஸிங் ஷூக்கள் போல வேகம் பெற்று ஜொலிக்கின்றன. இன்று நான் எங்கிருந்தாலும் பிரகாசமாக ஒளிர்கிறேன். இது நான் கொண்டாடித் தீர்க்க வேண்டிய நேரம். இன்று நானும் கூட படித்தவர்களில் ஒருத்தியாகி விட்டேன். அதனால் தான் இப்படிச் சந்தோஷமாக நடனமாடத் தோன்றுகிறது