சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது பசுமை பட்டாசுகள், 40% முதல் 50% வரை குறைவான நச்சு வாயுவையே வெளியிடக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்தப் புதிய ரக பட்டாசுகளை வெடித்தாலும் நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்கள் வெளியேறும் தான் என்றாலும் இவற்றில் என்ன சிறப்பு என்றால். இதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை. எப்படியெனில்? நீரி தயாரித்திருக்கும் சூத்திரத்தின் படி உருவாக்கப்படும் பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்து விடும் என்பதும் இதில் சற்று ஆறுதலான விஷயம்.