தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் தண்ணீர் பிரச்னையைப் போக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ரஜினி மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவளித்திருந்தார். 'தண்ணீர் பிரச்னையைப் போக்க நாட்டில் உள்ள நதிகளை இணைப்போம்' என்று பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. அதைத்தொடர்ந்து, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செயப்பட்டது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்றும் அமித் ஷாவும், மோடியும், கிருஷ்ணர்- அர்ஜுனர் போன்றவர்கள் என்று கூறியிருந்தார். இவ்வாறான கருத்துகளின் மூலமாக தமிழகத்தின் ஒரு பகுதி மக்கள், பாஜகவின் ஒரு பிரதிநிதியாகவே ரஜினியைப் பார்க்கின்றனர்.