பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க குஜராத் மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் புளூ கார்னர் நோட்டீஸை நித்தியானந்தாவுக்கு வழங்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்தல் போன்ற குற்றங்களுக்காக நித்தியானந்தாவை தேடி வருவதாகவும், அவரின் இருப்பிடம் தெரியாத நிலையில், புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலிடம் பெற்றுத் தருமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புளூ கார்னர் நோட்டீஸ் ?
எல்லைகளைத் தாண்டிய நடவடிக்கைகளுக்காக சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் 8 வகையான நிறங்களில் நோட்டீஸ் பிறப்பிக்கும்.
சிவப்பு அறிவிப்பு(Red Corner Notice)
ஒரு நீதித்துறை அல்லது ஒரு சர்வதேச தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டு தேடப்படும் நபரின் இருப்பிடம் / கைது செய்யப்பட அளிக்கப்படும் அறிவிப்பு.
நீல அறிவிப்பு(Blue Corner Notice)
ஒரு குற்றவியல் விசாரணையில் தேடப்படும் ஒரு நபரைக் கண்டுபிடிக்க, அடையாளம் காண அல்லது பெற கொடுக்கப்படும் அறிவிப்பு.
பசுமை அறிவிப்பு (Green Corner Notice )
அந்த நபர் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டால் ஒரு நபரின் குற்றச் செயல்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு.
மஞ்சள் அறிவிப்பு (Yellow Corner Notice )
காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிப்பது அல்லது தன்னை / தன்னை அடையாளம் காண முடியாத ஒரு நபரை அடையாளம் காண கொடுக்கப்படும் அறிவிப்பு.
கருப்பு அறிவிப்பு (Black corner Notice)
அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற கொடுக்கப்படும் அறிவிப்பு.
ஆரஞ்சு அறிவிப்பு(Orange Corner Notice)
ஒரு நிகழ்வு, ஒரு நபர், ஒரு பொருள் அல்லது நபர்கள் அல்லது சொத்துக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தை குறிக்கும் ஒரு செயல்முறை பற்றி எச்சரிக்கை.
ஊதா அறிவிப்பு (Purple Corner Notice)
நடைமுறைகள், பொருள்கள், சாதனங்கள் அல்லது குற்றவாளிகள் பயன்படுத்தும் மறைவிடங்கள் பற்றிய தகவல்களை வழங்க அறிவிப்பு.
இன்டர்போல்-ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு அறிவிப்பு (Interpol-United Nations Security Council Special Notice)
இன்டர்போலின் உறுப்பினர்களுக்கு ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் ஐ.நா. தடைகளுக்கு உட்பட்டது என்பதை தெரிவிக்கும் அறிவிப்பு.
அந்த வகையில், நித்தியானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க மாநில குற்றவியல் விசாரணை துறையை அகமதாபாத் காவல்துறை நாடியுள்ளது. இதற்கிடையில், கைலாசா என்ற இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி ஈகுவேடர் தீவு ஒன்றில் நித்தியானந்தா பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


