இவர்களில் லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், வினோபா பாவே, எம் ஜி ராமச்சந்திரன், அம்பேத்கர், ராஜிவ் காந்தி, வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆஸாத், அருணா ஆஸாப் அலி, ஜெயப்ரகாஷ் நாராயண், கோபிநாத் பர்தோலாய், மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட 12 பேருக்கு அவர்கள் மறைந்த பின்னரே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத் தக்கது. இவர்களில் இந்தியக் குடிமகன்கள் அல்லாத நெல்சன் மண்டேலாவுக்கும், கான் அப்துல் கபார் கானுக்கும் அவர்களது சுதந்திர போராட்ட வாழ்க்கைச் சாதனைகளின் அடிப்படையில் பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவித்திருக்கிறது இந்திய அரசு.