காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்கிய தஞ்சை என் கோபால்சாமி ஐய்யங்கார் குறித்து நேற்றைய தினம் ஊடகங்கள் நினைவு கூர்ந்தன. பாரதப் பிரதமராக பண்டித நேரு இருந்த காலகட்டத்தில் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளும் திறமையான அரசியல் தலைவராக அடையாளம் காணப்பட்டவர் என் ஜி ஐய்யங்கார். அவருக்கும் நேருவுக்குமான நட்பு என்பது மிக மிக ஆத்மார்த்தமானது. அதனால் தான் என் ஜி ஐய்யங்காரின் மறைவை ஒட்டி நேரு வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ‘அவரது மறைவு எனக்கு நேர்ந்த சொந்த இழப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துணை புகழ் வாய்ந்த திறமையாளர்களை இந்திய அரசியல் அரங்கில் மீண்டும் அடையாளம் காண்பதென்பது சற்றுக் கடினமான காரியம் தான்.