சுத்திகரிப்பு என்ற ஒரே விஷயத்தைத் தான் இரண்டு நாடுகளுமே செய்து வருகின்றன. ஆனால், அதைச் செயல்படுத்தும் முறையில் தான் எத்தனை பெரிய வித்யாசம் என்று பாருங்கள். இந்தியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் சுத்தம் மற்றும் சுகாதார விஷயத்தில் நடுவிலிருக்கும் தாண்ட முடியாத பிரமாண்ட பள்ளம் இது. இதைத் தாண்ட வேண்டுமெனில்... இந்த விஷயங்களை எல்லாம் முறையான விதத்தில் செயல்படுத்த நம்மிடையே மனிதாபிமானமும், நேர்மையும், குறைந்தபட்ச கருணையுமாவது கொண்ட நல்ல திட்டப் பணியாளர்கள் இருக்க வேண்டும், அவர்கள் வகுத்துக் கொடுக்கும் திட்டங்களை அங்கீகரித்துச் செயல்படுத்தவும், அனுமதி பெற்றுத்தரவும் நேர்மையான அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வேண்டும். இதெல்லாம் தலையால் தண்ணீர் குடிக்கும் வித்தை தான் இல்லையா? இந்தியாவில் நேர்மையான அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் பார்ப்பதென்பது குதிரைக் கொம்பாயிற்றே! ஆகவே தான் பிளாஸ்டிக் சுத்திகரிப்பில் ஜெர்மன் பின்பற்றும் எளிய நடைமுறையைக் கூட நம்மால் இன்று வரை பின்பற்றப்பட முடியாமலிருக்கிறது என்று எண்ணிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.