அந்த மாநாட்டில், சுவாமி தமது உரையை, அன்பார்ந்த அமெரிக்க சகோதர, சகோதரிகளே என்று தொடங்கிய போதே அமெரிக்கர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து விட்டார். பொதுவாக அன்பார்ந்த கனவான்களே, கனவதிகளே என்று துவங்கக் கூடிய மேற்கத்திய நாகரீகப் பேச்சுக்களைத் தவிர்த்து விவேகானந்தர் சகோதர, சகோதரிகளே என்று துவங்கியதை அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் வெகுவாக ரசித்தனர். அவரது வித்யாசமான துவக்கமே மொத்த உரையையும் பேரமைதியுடன் கேட்கும் சாத்தியத்தை அம்மக்களிடையே உண்டாக்கியது எனலாம். அந்த மாநாட்டில் சுவாமியின் உரைக்குக் கிடைத்த மரியாதையும் வரவேற்பும் அவரை மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றி பேச வைத்தது. சுவாமி தொடர்ந்து... நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் வேதாந்த மடங்களை நிறுவி இந்து மதப் பெருமைகளைப் பறைசாற்றும் பணிகளை செவ்வனே மேற்கொண்டார்.