நான் கருப்பு, எனில் நான் வணங்கும் தெய்வங்களும் கருப்பாய் இருந்தால் தவறில்லையே, இப்படி ஒரு கேள்வியோடு ‘இருளும் தெய்வீகமே’ எனும் கான்செப்டில் சமீபத்தில் ஒரு ஃபோட்டோஷூட் நடத்தி முடித்திருக்கிறார்கள் புகைப்படக் கலைஞர் நரேஷ் நில் மற்றும் சுந்தர் பரத்வாஜ் இருவரும். இவர்களது புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் துர்கா, சரஸ்வதி, லக்ஷ்மி, சிவன், பாலமுருகன், பாலகிருஷ்ணன், லவ, குசர்களுடனான சீதை என அனைவருமே கருநிறத் தெய்வங்கள். இப்படி ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்துவதற்கான தூண்டல் எதுவெனக் கேட்கையில் அக்கேள்விக்கான பதிலாகக் கிடைத்தது தான் இக்கட்டுரையின் முதல்வரி. நியாயமான ஆசை தான்!