அப்பு, அவருடைய குழந்தை பருவத்தை நினைத்துப்பார்க்கும் போது, அரிசி ஆலையில் வேலை செய்தது மட்டுமே அவரது நினைவில் இருக்கிறது. அதைத் தவிர, வேறு எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. அப்புவின் தந்தை அவருடைய வேலைப் பொறுப்புகள் என்ன என்பதை அவருக்கு கற்றுத் தந்து, பயிற்சியளித்திருந்தார். மற்ற பிள்ளைகளைப் போல பள்ளிக்கூடம் செல்வதற்கோ அல்லது நண்பர்களுடன் விளையாடுவதற்கோ அப்புவுக்கு நேரம் இருந்ததில்லை. சிறுவனாக இருந்த போதும் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் அரிசி மூட்டைகளை அப்பு சுமந்திருக்கிறார். அவருடைய தந்தை இறந்த பிறகும் கூடத் தனது தந்தையின் கடனை அடைப்பதற்கு, தொடர்ந்து வேலை செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அடிக்கடி மிக மோசமாக நடத்தப்பட்டதுடன், அரிசி ஆலையை விட்டு வெளியே செல்வதற்கும் அப்புவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.