சில மாதங்களுக்கு முன்பு, மகாபலிபுரம் செல்லும் வழியிலுள்ள ரிசார்ட் ஒன்றில் குடும்பத்துடன் தங்க நேர்ந்த போது, அங்குள்ள உணவகத்தில் இந்த சுடுமண் தேநீர் கோப்பையில் தான் டீ, காஃபீ, மோர், ஐஸ்கிரீம் என எல்லாவற்றையுமே பரிமாறினார்கள். முதலில் வித்யாசமாகத் தோன்றிய விஷயம் பிறகு ரசனைக்குரியதாக மாறி விட்டது. சூடான காஃபீ, டீ பானங்களை இந்தக் கோப்பையில் பரிமாறும் போது, அந்தச் சூட்டில் சுடுமண் கோப்பையின் உட்புறமுள்ள சுவர்ப்பகுதியின் மண் வாசமும், டீ வாசமும் கலந்தொரு மணம் நாசியை வருடும் போது இன்னும் இரண்டு முறை கூட டீ அருந்தலாமே என்றெழும் வேட்கையைத் தவிர்க்க முடியாதவர்களாவோம் நாம். அத்தனை அபார மணம், அதீத சுவை!