ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் என்ற பெயரில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் வஸ்துவைப் பற்றித்தான் தெரியும். ஆனால் அது சுத்தமானது தானா? அவற்றில் எத்தனை சதம் உடலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்திருக்கும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. நல்ல நிறைமஞ்சள் நிறத்தில் மாசு மருவின்றி வள, வளப்பான உருண்டைத் தன்மையுடன் ஒரு பாக்கெட்டுக்குள் அடைத்து விற்கப்படும் வெல்லத்தை அவர்கள் மனதார தூய்மையான வெல்லம் என எந்த வித நிர்பந்தமும் இன்றி ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அது அவர்களது கண்மூடித்தனமான நம்பிக்கையே தவிர நிஜமல்ல என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டுமில்லையா? எனவே வெல்லம் வாங்குவதைப் பற்றி யோசிக்கும் முன்பு நாம் வாங்கும் வெல்லம் சுத்தமானது தானா? இல்லையா? என்பதையும் யோசிக்க வேண்டும்.