ஒருவகையில் அறிந்தோ, அறியாமலோ பொதுமக்களும் இந்த அராஜகத்துக்கு உடந்தையாகத் தான் மாறிப்போனார்கள். ஏனென்றால், இத்தனை சித்ரவதைகளுக்கும் கால்நடைகள் உள்ளாக்கப்படுவது மனிதர்களின் தேவைகளை முன்னிட்டுத் தானே! ஆகையால் அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய கடமையும் கூட அதே மனிதனுக்கே உரித்தானது. இந்த அவலங்களை அறிந்த மனிதர்களில் சிலர் மனிதாபிமானத்துடன் பால் அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டு அதற்கு மாற்றாக முந்திரிக்கொட்டை, பாதாம், சோயா, ஓட்ஸ், அரிசி, மற்றும் தேங்காயிலிருந்து தயாராகும் பால் வகைகளுக்கு மாறி விட்டார்கள் என்கிறது அக்கட்டுரை.