செவ்வாய் அன்று ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டிருந்த கூட்டத்தில் ஒரு நபர் வந்த போது மட்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் வேறு யாருமல்ல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறந்த சகோதரரான அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா தான். மாலை சுமார் 5.30 மணி அளவில் தீபாவைக் கண்டதும் ’ ‘அப்படியே அம்மா போலவே இருக்கியேம்மா! எங்க அம்மாவையே உன் முகத்தில பார்க்கிறோம் நாங்க’ என்றவாறு கூட்டத்திலிருந்த பெண்கள் பெருவாரியாக அவரோடு பேசவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஆசைப்பட்டு அவரை நெருங்கி விரைந்து வந்தனர்.