கவலை தரும் கல்வியின் தரம்
கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயா்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மைபெற பாடத்திட்டங்களும் தோ்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.










