"கோ' ஆகிய இறைவன் (தலைவன்) "இல்'லம் தானே கோயில். அகஸ்திய, அருணாசல, ஆனந்த, இருதய, ஏகாம்பர, கச்சால, குசல, கேதார, கோமள, சிதம்பர, சுந்தர, சோமநாத, தர்ம, தார்த்திரி, திருவல்ல, தீர்த்தபால, நந்தி, நல்லிணக்க, பசுபதி, பீம, மல்ல, மருந்து, மாசிலாமணி, ரத்ன, ராமநாத, வீரசர, வெங்கி, வைத்திய, ஜம்புக, ஆதிபுர, ஞானபுர, தேணுபுர, வேதபுர என்று சென்னையைச் சுற்றிலும் எத்தனையோ நல்லவர்களை "ஈஸ்வரர்' அடைமொழியுடன் வழிபடுகிறோம். பக்கத்திலேயே காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, வடிவுடை, அபிராமி என அம்மன் சந்நிதிகளும் நிலைபெற்றன. பெருமாள் என்றால் தாயார் உடன் இருப்பார்.