ப்ரித்விராஜ் செளஹான் எனும் இயற்பெயர் கொண்ட ராஜபுத்திரர்களில் செளஹான் பிரிவைச் சார்ந்த இம்மன்னனுக்கு பக்கத்திலிருந்த நாடான கனோஜியின் இளவரசி சம்யுக்தையின் மீது தீராக்காதல். அவளுக்கும் தான். ஆனால், சம்யுக்தையின் தந்தையும், கனோஜியின் மன்னருமான ஜெயச்சந்திர ரத்தோடுக்கு ப்ரித்விராஜைக் கண்டால் ஆகாது. அவர் முகமது கோரியுடன் இணைந்து கொண்டு ப்ரித்விராஜை ஒடுக்கி டெல்லியைக் கைப்பற்றி மிகப்பெரும் ராஜபுத்திர பேரரசராகும் கனவில் இருக்கிறார். இந்நிலையில் மகளின் காதல் தெரிந்ததும் அவளை வேற்று மன்னர்களில் எவரேனும் ஒருவருக்கு மணமுடித்து அனுப்ப சுயம்வரம் நடத்துகிறார்.