வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

நான் முதலமைச்சர் ஆகணும்... வைரலாகும் த்ரிஷா விடியோ!

வைரலான த்ரிஷா விடியோ...

News image

த்ரிஷா

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

நடிகை த்ரிஷாவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தேர்தல் முடிவுகள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் அவர் ஆட்சியமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஆதரவுக்கட்சிகளால் முதல்வராக விஜய் ஆட்சியமைப்பார் என்றே தெரிகிறது.

வாக்கு எண்ணிக்கையின்போது, சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வந்த த்ரிஷா ஒரு மணி நேரத்துக்கு மேல் அவருடன் இருந்துவிட்டு கிளம்பிச் சென்றார். விஜய்யும் த்ரிஷாவும் நெருக்கமாக இருப்பதால் திரைத்துறையைச் சேர்ந்த சிலர், நேற்று த்ரிஷாவின் பிறந்த நாளில், இதைவிட சிறந்த பிறந்த நாள் பரிசு இருக்க முடியாது என மறைமுகமாக ஆட்சியைக் குறிப்பிட்டு வாழ்த்தினர்.

இந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு த்ரிஷா அளித்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், த்ரிஷா, “எனக்கு உண்மையாகவே முதலமைச்சர் ஆக வேண்டுமென ஆசை இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் பாருங்கள்” என சிரித்துக்கொண்டே கூறியிருந்தார்.

தற்போது, இந்த விடியோவை பலரும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அன்று த்ரிஷாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Actress Trisha's speech has gone viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.