மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

விஜய் வெற்றியைக் கொண்டாடிய கேரள ரசிகர்கள்!

தவெக வெற்றியைக் கொண்டாடிய கேரள ரசிகர்கள்...

News image

கேரள மாநிலம் கொல்லத்தில் விஜய் பதாகையுடன் ரசிகர்கள்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

தவெக தலைவர் விஜய் தேர்தலில் வென்றுள்ளதை கேரள ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் அவர் ஆட்சியமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஆதரவுக்கட்சிகளால் முதல்வராக விஜய் ஆட்சியமைப்பார் என்றே தெரிகிறது.

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இவர் நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் பல பிரச்னைகளைச் சந்தித்து இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருக்கிறது. தற்போது, தேர்தலில் வென்றுள்ளதால் அடுத்த சில நாள்களிலேயே இப்படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், கேரளத்தில் பல பகுதிகளில் விஜய்யின் வெற்றியை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக கொல்லத்தில், ஊர்வலமாகச் சென்று ’முதல்வர் விஜய்’ கோஷத்தையும் எழுப்பியுள்ளனர். இதற்கான புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Kerala fans have celebrated the victory of Tvk leader Vijay in the elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.