மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?

ஜன நாயகனில் இடம்பெறவுள்ள விஜய் பெயர் குறித்து...

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - படம்: பிடிஐ.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

ஜன நாயகன் திரைப்படத்தின் டைட்டிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் என இடம்பெற உள்ளதாம்.

தேர்தல் முடிவுகள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் அவர் ஆட்சியமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஆதரவுக்கட்சிகளால் முதல்வராக விஜய் ஆட்சியமைப்பார் என்றே தெரிகிறது.

இதற்கிடையே, இவர் நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் பல பிரச்னைகளைச் சந்தித்து இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருக்கிறது. தற்போது, தேர்தலில் வென்றுள்ளதால் அடுத்த சில நாள்களிலேயே இப்படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், இதுவரை ‘தளபதி விஜய்’ என பெயர் பொறிக்கப்பட்ட திரையில், ஜன நாயகனுக்கு ‘மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்’ என்கிற பெயரைப் பயன்படுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் விஜய்யாக இருந்தவர், ’இளைய தளபதி’ பட்டத்தைப் பெற்றார். மெர்சல் திரைப்படத்திலிருந்து, ‘தளபதி’ விஜய்யானார். தற்போது, ‘மாண்புமிகு தமிழக முதல்வர்’ ஆகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

The title of the movie Jana Nayagan mentions the Honorable Chief Minister of Tamil Nadu, Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.