17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜன நாயகன் வெளியீடு எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

ஜன நாயகன் வெளியீடு மற்றும் திரைத்துறை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தது தொடர்பாக...

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 9:58 am IST

ஜன நாயகன் வெளியீடு மற்றும் திரைத்துறை குறித்து திரைப்படத் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

ஜன நாயகன் திரைப்படத்தை தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பிறகுதான் வெளியிட முடியும். அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஜன நாயகன் மட்டுமல்ல; எந்தத் திரைப்படமாக இருந்தாலும் முறைப்படி அதற்கு உரிய சான்றிதழ்களை பெற்றுத்தான் வெளியிட முடியும்.

திரைத்துறை என்பது மக்களுடைய அன்றாட வாழ்க்கையோடு இணைந்தது. மிகவும் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு அது தெரபி. திரைத்துறை என்பது பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய்மடி. எங்கள் முதல்வரே அங்கிருந்து வந்தவர்தான்.

ஆகையால், திரைத்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து அதில் எவற்றை நிர்வாக ரீதியாக சரிசெய்ய வேண்டுமோ அதை சரிசெய்து, நிதி தொடர்பான கோரிக்கைகளையும் பரிசீலணை செய்து, முதல்வர் விஜய்யுடன் கலந்தாலோசித்து அவருடைய அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொன்றாக சரிசெய்யப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Summary

Film Technology Minister Rajmohan made statements on Saturday regarding the release of Jananayagan and the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.