தூத்துக்குடியில் காவல் அதிகாரிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தவெக அரசை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களைக் கைது செய்ய சென்ற காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திவிட்டு, குற்றவாளிகள் தப்பியோடியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், பொதுமக்களின் பாதுகாப்புதான் கேள்விக்குறியாகி வருகிறது என்று பார்த்தால், சிங்கப்பெண் சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கு பாலியல் தொல்லை, குற்றவாளிகளைப் பிடிக்க சென்றவர்களுக்கு அரிவாள் வெட்டு என காவலர்களின் நிலைமை படுமோசமாகிக் கொண்டிருக்கிறது.
போகிற போக்கைப் பார்த்தால், தமிழகக் காவலர்களின் பாதுகாப்புக்கே நாம் பிற மாநிலக் காவல்துறையின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும் போல.
அக்மார்க் ரௌடிகளை எல்லாம் தமிழகத்தின் முக்கிய அமைச்சராக அமர்த்தினால், எஞ்சியுள்ள குற்றவாளிகளுக்கு அரசைக் கண்டால் இளக்காரமாகத் தானிருக்கும் என்பதை முதல்வர் விஜய் எப்போது உணர்ந்து தனது கட்சியை தூய்மைப்படுத்துகிறாரோ, அப்பொழுது தான் தமிழகத்தின் அமைதி உறுதி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
Summary
BJP has sharply criticized the TVK government regarding the attack on police personnel in Thoothukudi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி! நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்த பாஜக வலியுறுத்தல்!







