மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாகசம் செய்து பிறந்த நாள் கொண்டாடிய நடிகை மதுமிதா!

எதிர்நீச்சல் புகழ் மதுமிதா தனது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடியது சர்ச்சையாகியுள்ளது குறித்து...

News image

நடிகை மதுமிதா - இன்ஸ்டாகிராம்

Updated On :30 மார்ச் 2026, 11:06 am

சின்ன திரை நடிகை மதுமிதா தனது பிறந்த நாளை நண்பர்கள் உதவியுடன் வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார்.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நண்பர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்ட மதுமிதா, இம்முறையும் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் மதுமிதா பகிர்ந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மதுமிதா. இவர் தெலுங்கில் ஒருசில தொடர்கள் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

எதிரீச்சலில் மதுமிதா

எதிரீச்சலில் மதுமிதா - இன்ஸ்டாகிராம்

எதிர்நீச்சல் தொடர், டிஆர்பியில் முன்னணியில் இருந்ததுடன், இவரின் நடிப்புக்கும் எதிர்நீச்சல் தொடர் சிறப்பான அங்கீகாரம் கொடுத்தது.

எதிர்நீச்சலில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் மதுமிதா நடித்து வருகிறார். அய்யனார் துணை தொடரும் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அய்யனார் துணை தொடரில் மதுமிதா...

அய்யனார் துணை தொடரில் மதுமிதா... - இன்ஸ்டாகிராம்

எந்த தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், மதுமிதா நாயகியாக நடிக்கும் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெறுவதால், சின்ன திரையில் மிக முக்கியமான நாயகியாக மாறியுள்ளார்.

ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்ட மதுமிதா, நண்பர்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாளின்போது மெழுகுவர்த்தியை வாயில் வைத்து பற்ற வைத்து கேக் மீது வைத்து பின்னர், கேக் மீது உள்ள மெழுகுவர்த்திகளை ஆபத்தான முறையில் ஊதுகிறார். அது அணையாமல் கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை விடியோவாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், சிலர் மதுமிதாவின் இத்தகைய செயலை கண்டிக்கவும் செய்துள்ளனர்.

பாதுகாப்பு அம்சங்களுடன் அவர் இத்தகைய ஆபத்தான காரியங்களை செய்தாலுமே, அதனை சமூகவலைதளப் பக்கத்தில் பகிரும்போது ரசிகர்களில் சிலர் அதனால் தவறாக வழிநடத்தப்படலாம் என்ற அச்சம் எழுவதாக பலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

Summary

Ayyanar thunai serial actress Madhumitha Bday celebration

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.