மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்: எதிர்நீச்சல் பார்வதி

பெண்களின் இயல்புகள் பணியிடங்களில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வருவதாக சின்ன திரை நடிகை பார்வதி கருத்து...

News image

நடிகை பார்வதி - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :16 மார்ச் 2026, 10:42 am

சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன் என எதிர்நீச்சல் தொடரின் நாயகி பார்வதி தெரிவித்துள்ளார்.

பல்வேறு இடங்களில் பெண்களின் இயல்புகள் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதாகவும், ஆனால் அவற்றை சகித்திக்கொள்ள வேண்டிய இடத்திலேயே பெரும்பாலான பெண்கள் இருக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றத் தொடர்களில் ஒன்றாக எதிர்நீச்சல் -2 தொடர் உள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.

ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் மருமகள்களாகச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்னைகளுமே இத்தொடரின் மையக்கருவாக உள்ளது.

இத்தொடரின் முதன்மை பாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துவருகிறார். இவர் மட்டுமின்றி ஹரிபிரியா இசை, பிரியதர்ஷ்னி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் -2 தொடரின் நாயகிகள்

எதிர்நீச்சல் -2 தொடரின் நாயகிகள் - படம் - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் பணியிடத்தின் சூழல் குறித்து நடிகை பார்வதி பேசியது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பணிபுரியும் இடத்தில், தான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, தனக்கும் கிடைக்க வேண்டும் என்றும், சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன் எனவும் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பார்வதி

நடிகை பார்வதி - படம் - இன்ஸ்டாகிராம்

நடிப்புத் துறையில் நுழைந்ததுமே தான் எடுத்த மிக முக்கியமான முடிவு இது என்றும், அத்தகைய மரியாதை கிடைக்கும்போது தனது முழு பங்களிப்பையும் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் நேரத்தை செலவழித்து தொடர்களைப் பார்ப்பதாகவும், அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையிலான பணிகளையே தொடர்ந்து செய்வதாகவும் கூறியுள்ளார்.

பல்வேறு இடங்களில் பெண்கள் தங்களின் நடவடிக்கைகளுக்காக விமர்சிக்கப்படுவதாகவும், ஆனால், இதனைச் சகித்துக்கொண்டு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான பெண்கள் இருப்பதாகவும் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

Summary

Sun tv Ethirneechal -2 Serial Actress parvathy about self respect

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.