ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விறுவிறுப்பான கிளைமேக்ஸ்... மகாநதி தொடர் 881 எபிசோடுகளுடன் நிறைவு!

மகாநதி தொடர் 881 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது தொடர்பாக...

serial

மகாநதி தொடர் கிளைமேக்ஸ் காட்சி. - படம்: விடியோ கிளிப்

Published On :28 ஜூன் 2026, 1:26 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடர், 881 எபிசோடுகளுடன் அண்மையில் நிறைவடைந்தது.

மகாநதி தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்திருந்தனர். மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.

இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வந்தார். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்த்து வந்தனர்.

மகாநதி தொடரில் நடித்த நடிகை லஷ்மி பிரியா - சுவாமிநாதன் இணைக்கு சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடரின், படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவந்த மகாநதி தொடர், விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன், 881 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது.

காவேரிக்கு நினைவுத் திருப்பிய நிலையில், விஜய் - காவேரி இணைவதுபோல காட்சியமைக்கப்பட்டு தொடர் நிறைவடைந்தது.

மகாநதி தொடரின் 2ஆம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பிரவீன் பென்னட்டுக்கு, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Summary

The Mahanadhi serial, which aired on Vijay TV, concluded with 881 episodes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.