ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் 120 எபிசோடுகளுடன் நிறைவு!

விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...

LBW

எல்பிடபுள்யூ இணையத் தொடர். - படம்: எக்ஸ்

Published On :23 ஜூலை 2026, 3:32 pm IST

நடிகர் விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் 120 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வியாழன்தோறும் எல்பிடபிள்யூ இணையத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கியிருந்தார். ‘ஹார்ட் பீட்’ தொடரை தயாரிக்கும் அட்லீ பேக்டரி நிறுவனம் இந்தத் தொடரையும் தயாரித்து வந்தது.

மேலும், இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்‌ஷிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்த விக்ராந்த், சில பிரச்னைகள் காரணமாக தனது புகழை இழக்கிறார். பின்னர், அவரே ஒரு கிரிக்கெட் குழுவை உருவாக்கி பயிற்சியாளராக எப்படி வென்றார் என்பதை மையப்படுத்தி எல்பிடபுள்யூ தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர், இந்த வார எபிசோடுகளுடன் இன்று(ஜூலை 23) நிறைவடைந்தது.

அடுத்த வாரம் வியாழந்தோறும் ஹார்ட் பீட் தொடரின் 3 ஆம் பாகம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Actor Vikranth's web series 'LBW' concluded with 120 episodes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.