தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

சுந்தர் சி - குஷ்பு மகள் திருமணம் கோலாகலம்!

சுந்தர் சி - குஷ்பு மகள் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது.

News image

சுந்தர் சி - குஷ்பு மகள் அவந்திகா - Instagram

Updated On :25 ஜூன் 2026, 5:25 pm IST

பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி - நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசனுக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்திருந்தனர். சுந்தர் சி - குஷ்பு தம்பதி, திருமண அழைப்பிதழை, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய், முக்கிய நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளுக்கு நேரில் சென்று கொடுத்திருந்தார்கள்.

இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், திரையுலகைச் சேர்ந்த ராதிகா, சுகாசினி, பூர்ணிமா, திரிஷா, சுஜாதா விஜயகுமார், நடன இயக்குநர் பிருந்தா, நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்ளை வாழ்த்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஷ்பு மகளும், மணப்பெண்ணுமான அவந்திகா, அட்டாக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Summary

The wedding of Sundar C and Khushbu's daughter took place in a grand manner in Goa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.