பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இந்த முறை என்னவென்று வாழ்த்துவார் த்ரிஷா?

நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வாரா...

News image

முதல்வர் விஜய் - த்ரிஷா (கடந்தாண்டு பிறந்த நாள் புகைப்படம்)

Updated On :22 ஜூன் 2026, 3:15 pm IST

நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கடந்து ஆண்டுவரை நடிகராக இருந்தவர் இன்று தமிழகத்தின் முதல்வர் என்பதால் பல பகுதிகளிலும் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரம், கட்சியினரிடமும் ரசிகர்களிடமும் பதற்றமும் எழுந்துள்ளது. காரணம், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்து 40 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் மின்வெட்டு உள்பட பல பிரச்னைகளைச் சந்தித்து தாக்குதல்களையும் சந்திது வருகிறது.

இதற்கிடையே, நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு சர்ச்சையான வகையில் வாழ்த்துகளைத் தெரிவித்தால் என்ன செய்வது? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். கடந்த முறை, “பிறந்த நாள் வாழ்த்துகள் மிகச் சிறந்தவரே” என விஜய்யைத் த்ரிஷா வாழ்த்தியிருந்தார். அப்படம் மில்லியன் விருப்பங்களைப் பெற்றதுடன் பல்லாயிரம் கருத்துகளையும் பெற்றது.

அன்று நடிகர், இன்றோ முதல்வர்... என்ன சொல்லி த்ரிஷா வாழ்த்த போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

There is anticipation regarding whether actress Trisha will extend birthday wishes to Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.