ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருமண வாழ்க்கையில் நுழைந்த பாரதி கண்ணம்மா வினுஷா!

பாரதி கண்ணம்மா நாயகி வினுஷா தேவிக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் குறித்து...

Published On :18 ஜூன் 2026, 3:16 pm IST

நடிகை வினுஷா தேவிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார்.

தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட வினுஷா, அண்மையில் நிறைவடைந்த பனி விழும் மலர் வனம் என்ற தொடரிலும் நடித்திருந்தார்.

தற்போது, வினுஷா தேவி தெலுங்கு மொழியில் பிரபலமடைந்த சின்னி என்ற தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்படும் சுற்றும் விழி சுடரே தொடரில் நடிகை வினுஷா நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு சுற்றும் விழி சுடரே என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவிக்கு, லிங்கேஸ்வரன் என்பவருடன் நேற்று(ஜூன் 17) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

உற்றார் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

வினுஷா தேவி - லிங்கேஷ்வரன் ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Actress Vinusha Devi is set to get married soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.