ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் விந்தியாராணி தேவி வெண்கலம் வென்றது குறித்து...

Bindyarani Devi

விந்தியாராணி தேவி - பிடிஐ

Published On :27 ஜூலை 2026, 10:52 pm IST

காமன்வெல்த் தொடரில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் விந்தியாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதன்மூலம், இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பளுதூக்குதலில் மட்டும் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் விந்தியாராணி தேவி கலந்துகொண்டார்.

இப்போட்டியில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த விந்தியாராணி வெண்கலப் பதக்கம் வென்றார். கனடாவைச் சேர்ந்த ஆன் சோஃபி டாஷெரோ வெள்ளிப் பதக்கமும் நைஜீரியாவைச் சேர்ந்த ரகியாடு தங்கப் பதக்கமும் வென்றார்.

27 வயதாகும் மணிப்பூரைச் சேர்ந்த விந்தியாராணி வென்ற வெண்கலப் பதக்கத்தால், காமன்வெல்த் தொடரில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மீராபாய் சானு, ரிஷிகாந்தா சிங், ராஜா முத்துப்பாண்டி, ஞானேஸ்வரி யாதவ், விந்தியாராணி தேவி ஆகியோர் பளுதூக்குதலிலும் பாரா பளுதூக்குதலில் ஜண்டு குமார் பதக்கம் வென்றுள்ளார்.

Summary

Commonwealth Games 2026 India Bindyarani Devi won bronze medal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.