சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நிறைவடைகிறது ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடர்!

செல்லமே செல்லமே தொடர் நிறையவடையவுள்ளது குறித்து...

News image

செல்லமே செல்லமே தொடரின் காட்சி. - படம்: விடியோ கிளிப்

Updated On :14 ஜூன் 2026, 12:14 pm IST

நடிகை ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடர் விரைவில் நிறைவடைகிறது.

சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா முரளிதரன். அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் தொடரில் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது, இவர் செல்லமே செல்லமே தொடரில் பிரதான தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடிகர் ரேஷ்மா முரளிதரன் உடன் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், பிரிந்த கனவன் மற்றும் மனைவிக்கு இடையே சிக்கி தவிக்கும் குழந்தைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தத் தொடரில் அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், இறுதிக்கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

ரேஷ்மா முரளிதரனின் கிழக்கு வாசல் தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்த நிலையில், செல்லமே செல்லமே தொடரும் தொடர் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலியே நிறைவடைகிறது.

Summary

Actress Reshma Muralidharan's serial Chellame Chellame is coming to an end.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.