எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

நடிகைகள் குறித்து நித்யா மெனன்....

News image

நித்யா மெனன்

Updated On :9 ஜூன் 2026, 2:24 pm IST

நடிகைகள் சில எல்லைகளை வைத்திருக்க வேண்டும் என நித்யா மெனன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மெனன். இறுதியாக, தமிழில் தலைவன் தலைவி படத்தில் நடித்து வெற்றியையும் பெற்றார். அடுத்தடுத்து சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் வெளியான பெத்தி படத்தில் நடிகை ஜான்வி கபூரை மிகக் கவர்ச்சியாக காட்டியதால் சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து, படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா பெண்களை அவமரியாதை செய்ய அப்படியான காட்சிகளை வைக்கவில்லை என மன்னிப்பு கேட்டார்.

தற்போது, இதுகுறித்து நடிகை நித்ய மெனன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நடிகைகளைக் கவர்ச்சியாகக் காட்டுவது தென்னிந்திய சினிமாவில் மட்டும் நடப்பது அல்ல. புகழடைந்தால் போதும் என நினைக்கும் நடிகைகள் இந்தப் போக்கிற்குத் துணை போகின்றனர். ஆனால், ஆரம்பத்திலேயோ அல்லது படப்பிடிப்பிலேயோ தன்னை மிகக் கவர்ச்சியாகக் காட்டும்போதோ அல்லது தனக்கு விருப்பமில்லாத காட்சியை எடுக்கும்போது திட்டவட்டமாக மறுப்பை வெளிப்படுத்துவதுடன் நடிகைகள் தங்களுக்காக சில எல்லைகளையும் வைத்திருப்பது முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

Nithya Menen has stated that actresses should maintain certain boundaries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.