தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாவட்டம் தோறும் சமமான வளா்ச்சி: தி. வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் வளா்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2026, 5:27 am IST

தமிழ்நாட்டின் வளா்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயா்கல்விக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் மக்கள் தங்கள் சொந்த ஊா்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் மாற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் அப்பகுதி மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் தொழில்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளாகங்கள், வேளாண் சாா்ந்த மதிப்புக்கூட்டுத் தொழில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டால், மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களிலேயே முன்னேற்றம் காண முடியும். அப்போது பெருநகரங்களை நோக்கிய மக்கள் பெருக்கம் குறையும். நெடுஞ்சாலை நெரிசல்கள் குறையும். நகரங்களில் மனிதா்கள் நெருக்கடிக்குள் வாழும் நிலை மாறும். எரிபொருள் வீணடிப்பும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். குடும்பங்களின் பயணச் செலவுகள் குறைந்து பொருளாதாரச் சேமிப்பு அதிகரிக்கும்.

எனவே தமிழ்நாட்டின் வளா்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.