புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்த திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலக இளநிலை உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி சுடரொளி நகரை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் தமிழ்மாறன் (36). திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த இவா், விடுமுறை நாள்களில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.
இதேபோல், ஞாயிற்றுக்கிழமை வெள்ளக்கொல்லை பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளாா்.
அப்போது, மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த நிலையில், சக விளையாட்டு வீரா்கள் தமிழ்மாறனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு நடைபெற்ற பரிசோதனையில், தமிழ்மாறன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










