ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏ சான்றிதழ்! ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி குறித்து...

jana nayagan

ஜன நாயகன் விஜய்

Published On :2 ஜூலை 2026, 11:46 am IST

முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வரான பின்பு ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக, படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார்.

ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் இப்படம் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. சான்றிதழ் கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியாகுமென தயாரிப்பாளரும் கூறியிருந்தார். மேலும், முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதியில் ஏதாவது அப்டேட் வெளியாகும் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் இல்லாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனராம். இதற்கு மேலும் இழுபறி வேண்டாமென தயாரிப்பு நிறுவனம் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் இப்படத்தை ஜூலை 16 ஆம் தேதி வெளியிடத் திடமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Information regarding the release date of the film Jana Nayagan, starring Vijay, has been revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.