ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜன நாயகன் படத்தை நாளை மீண்டும் பார்க்கும் முதல்வர் விஜய்!

ஜன நாயகன் படத்தை மீண்டும் பார்க்கவிருக்கும் முதல்வர் விஜய் பற்றி...

CM Vijay to watch the movie Jana Nayagan again tomorrow

விஜய் / பூஜா ஹெக்டே

Published On :24 ஜூலை 2026, 8:00 pm IST

ஜன நாயகன் படத்தை முதல்வர் விஜய் நாளை(சனிக்கிழமை) மீண்டும் பார்க்கவுள்ளார்.

காலை 11.30 மணியளவில் படத்தை அவர் பார்த்து ரசிக்கவுள்ளார். ஏற்கெனவே அரசு அதிகாரிகளுடன் படத்தின் சிறப்புக் காட்சியை ரிலீஸுக்கு ஒருநாள் முன்பு முதல்வர் விஜய் பார்த்திருந்தார். இந்த முறை ஜன நாயகன் படக்குழுவுடன் அவர் படத்தை பார்க்கவிருக்கிறார்.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கடந்து படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படம் அமைச்சர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

Summary

Chief Minister Vijay is set to watch the movie 'Jana Nayagan' again tomorrow (Saturday).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.