டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இவர்களுக்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும்? ரஷ்மிகா மந்தனா பதில்!

வதந்திகள் குறித்து ரஷ்மிகா கருத்து...

News image
ரஷ்மிகா மந்தனா
Updated On :28 ஜனவரி 2026, 6:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ரஷ்மிகா மந்தனா வதந்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை ரஷ்மிகா மந்தனா பான் இந்திய நடிகையான பின்பு பெரும்பாலும் மும்பையிலேயே இருக்கிறார். நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.

மேலும், அண்மை காலமாக இவர் குறித்து நிறைய வதந்திகளும் பரபப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேர்காணலில் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஷ்மிகா, “வதந்தி பரப்புபவர்களுக்கு பணம் சம்பாதிக்கத்தான் அந்த வேலையைச் செய்கின்றனர். இப்படியான பொய்களைப் பேசும் முகமில்லாதவர்களுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும்? இதற்கெல்லாம் பதில் சொன்னால், அவர்களை ஊக்கப்படுத்துவது போல ஆகிவிடும்” எனக் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன், “சினிமாவிலும் மற்ற துறைகளைப் போல 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் என நினைக்கிறேன். நடிகர்கள், இயக்குநர்கள், லைட் மேன்கள் வரை அனைவருக்கும் குடும்பமும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது. இளமையில் நீண்ட நேரம் வேலை செய்து உடலைக் கெடுத்துக்கொண்டோம் என பிற்காலத்தில் வருந்தக்கூடாது” என ரஷ்மிகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.