ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க வேண்டுமா? புதிய படத்தின் தலைப்பில் ட்விஸ்ட்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய படத்தின் பெயரைக் கூறுபவரைச் சந்திப்பதாக ட்விஸ்ட் வைத்துள்ளார்.

News image

X | Rashmika Mandanna

Updated On :26 ஜூன் 2025, 2:07 pm

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா, தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் குபேரா வெளியாகி, இதுவரையில் ரூ. 100 கோடி வசூல் பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காட்டுப் பகுதியில் கையில் ஈட்டியுடன் சண்டையிடப் போவது போன்று ராஷ்மிகா நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கதைக்களமானது, கதாநாயகியை மையமாக வைத்து உருவாவதாகத் தெரிகிறது.

புதிய தயாரிப்பு நிறுவனமான ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது.

இந்தப் படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை நாளை வெளியாவதாக ராஷ்மிகா அறிவித்துள்ளார். இதுவரை பார்த்திராத ராஷ்மிகாவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள் என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, படத்தின் பெயரை கூறும் ரசிகரை நேரில் சந்திப்பேன் என்றும் ராஷ்மிகா ட்விஸ்ட் வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.