ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அற்புதம்! டிஎன்ஏ படத்தைப் பாராட்டிய சுதா கொங்காரா!

டிஎன்ஏ படத்தை இயக்குநர் சுதா கொங்காரா பாராட்டியுள்ளார்...

News image
Updated On :24 ஜூன் 2025, 7:17 am

அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தை இயக்குநர் சுதா கொங்காரா பாராட்டியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எமோஷனல் த்ரில்லராக உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக, அதர்வா மற்றும் நிமிஷாவின் நடிப்பும் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக இருந்ததாக விமர்சனங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும், படத்தின் கதையும் திரைக்கதையும் பேசப்பட வேண்டிய விஷயத்தை பரபரப்பாக பேசியதால் அதர்வாவுக்கும் நல்ல படமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், டிஎன்ஏ படத்தைப் பார்த்த இயக்குநர் சுதா கொங்காரா, “ஒரு அருமையான படத்தைப் பார்த்தேன். எப்போதும்போல் நெல்சன் வெங்கடேஷன் அற்புதமாக எழுதியிருக்கிறார். நடிகர்கள் அதர்வா, நிமிஷா, சேத்தன், பாலாஜி சக்திவேல் மற்றும் அந்த பாட்டியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. ரசிகர்களுடன் சந்தோஷமாக படத்தைப் பார்த்தேன். அருமை” எனப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.