ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு?

கோட் படக்குழுவினர் சம்பளம் குறித்து...

News image

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, பிரபு தேவா, பிரசாந்த்.

Updated On :4 செப்டம்பர் 2024, 5:25 am

கோட் திரைப்படத்தின் படக்குழுவினர் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் செப். 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், படக்குழுவினர் பெற்ற சம்பளம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான கோட்டில் நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றிருந்ததை படத்தின் தயாரிப்பாளரே உறுதிசெய்திருந்தார்.

விஜய்க்கு அடுத்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ரூ. 10 கோடியையும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரூ. 3 கோடியையும் பெற்றுள்ளனர்.

மேலும், நடிகர்களான பிரபு தேவா ரூ. 2 கோடி, பிரஷாந்த் ரூ. 75 லட்சம், ஜெயராம் ரூ. 50 லட்சம், அஜ்மல் ரூ. 50 லட்சம், மோகன் ரூ. 40 லட்சம் மற்றும் நடிகை ஸ்நேகா ரூ. 30 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோக, முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் மீனாட்சி சௌத்ரி, லைலா, யோகிபாபு, வைபவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் கோட் வசூல் சாதனை புரியும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.