சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கார்த்திகை தீபம் சீரியல் வேண்டாம்: நடிகர் கார்த்திக் ராஜுக்காக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!

கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் கார்த்திக் ராஜ் தொடர்ந்து நடித்து வருவது குறித்து அவரின் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

News image
நடிகர் கார்த்திக் ராஜ்- இன்ஸ்டாகிராம்
Updated On :2 செப்டம்பர் 2024, 11:14 am

DIN

கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் கார்த்திக் ராஜ் தொடர்ந்து நடித்து வருவது குறித்து அவரின் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் கார்த்திக் ராஜுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில், கார்த்திகை தீபம் தொடரில் அவருக்கு குறைவான காட்சிகளே கொடுக்கப்படுவதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கார்த்திகை தீபம் தொடரில், ஆர்த்திகாவுக்கு இரட்டை வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது கார்த்திக் ராஜின் முக்கியத்துவத்தை மேலும் குறைக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகர் கார்த்திக் ராஜ் கார்த்திக் என்ற முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்த்திகா தீபா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை ஆர்த்திகாவுக்கு கீதா என்ற மற்றொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நாயகியின் இரட்டை வேடம்

நாயகியின் இரட்டை வேடம்

புடவை அணிந்து சாந்தமான பெண்ணாக தீபா பாத்திரமும், மார்டன் உடையில் தைரியம் மிகுந்த பெண்ணாக கீதா பாத்திரமும் உள்ளது. இதனால் நடிகை ஆர்த்திகா, தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமைந்துள்ளது.

ஆனால், கார்த்திக் ராஜுக்கு போதிய காட்சிகள் கொடுக்கப்படவில்லை என்றும், தற்போது நாயகிக்கு இரட்டை வேடம் இருப்பதால், கார்த்திக்கிற்கான முக்கியத்துவம் மேலும் குறையும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

நடிகர் கார்த்திக் ராஜ்

நடிகர் கார்த்திக் ராஜ்

இதனால் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என கார்த்திக் ராஜுக்கு அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கார்த்திகை தீபம் தொடரில் சிறையிலிருந்து வெளியே வந்து அறிமுகம் கொடுக்கும் சீதாவின் பாத்திரம் அறிமுகமாகும் முன்னோட்ட விடியோவை ஜீ தமிழ் வெளியிட்டது. இந்த விடியோவில் ரசிகர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ரசிகர்களின் கருத்துகள்

ரசிகர்களின் கருத்துகள்

நடிகர் கார்த்திக் ராஜ் நடித்த செம்பருத்தி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக ஆண்டுகள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையைப் பெற்றது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற செம்பருத்தி தொடர், டிஆர்பி பட்டியலிலும் நல்ல புள்ளிகளைப் பெற்றிருந்தது.

மேலும், கார்த்திக் ராஜ் நடித்த 'பிளாக் அண்ட் வொயிட்' என்ற திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஜீ தமிழில் பிரீமியர் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.