தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படப்பிடிப்பு எப்போது முடியும்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாள்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2024, 9:16 am

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த்.வி என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமரன் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.60 கோடி கொடுத்துப் பெற்றதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

Story image

இந்த நிலையில், புதுச்சேரியில் 30 நாள்களாக தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு மீதமிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இதற்கடுத்து வெளியீட்டுக்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.