தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

100 நாள்களை நிறைவு செய்த குழந்தைகளின் தொடர்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு சீரியலில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்.

News image

100வது நாள் கொண்டாட்ட போஸ்டர்

Updated On :12 ஜூன் 2024, 10:49 am

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தேன் வந்தாய் தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மற்ற எந்தத் தொடரிலும் இல்லாதவகையில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் இந்தத் தொடர் கவர்ந்துள்ளது.

இத்தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் கணேஷ் வெங்கட்ராமன், 17 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சி தொடருக்கு திரும்பியுள்ளதால் இந்தத் தொடரின் மீது ஆரம்பம் முதலே பலருக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இந்த 100 நாள் எபிஸோடுகளில் பூர்த்தியாகியுள்ளது என்றே ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நினைத்தேன் வந்தாய் தொடர்

நினைத்தேன் வந்தாய் தொடர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு நினைத்தேன் வந்தாய் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், கீர்த்தனா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 4 குழந்தை நட்சத்திரங்களும் அவர்களை பராமரிப்பவரின் பாத்திரத்தில் ஜாஸ்மின் ராத் என்பவரும் நடித்து வருகிறார். வில்லியாக அஞ்சலி ராவ்வும் நடித்து வருகின்றனர்.

மருத்துவரான கணேஷ், 4 குழந்தைகளை தனித்த தந்தையாக வளர்த்து வருகிறார். இடையில் அவர்களை கவனித்துக்கொள்ள இறந்த நாயகியின் சகோதரியே வருகிறார். கணேஷுக்கு தெரியாது. இவர்களுக்குள் நடக்கும் கதையே நினைத்தேன் வந்தாய்.

தொடரின் குழந்தை நட்சத்திரங்கள்

தொடரின் குழந்தை நட்சத்திரங்கள்

4 குழந்தை நட்சத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதால், நினைத்தேன் வந்தாய் தொடருக்கு ஏராளமான இளம் ரசிகர்களும் உள்ளனர். குழந்தைகளைக் கொண்டு ரசிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் இடம்பெறுவதால் இல்லத்தரசிகளையும் இத்தொடர் கவர்ந்துள்ளது.

குழந்தை நட்சத்திரங்களுடன் நடிகை அஞ்சலி ராவ்

குழந்தை நட்சத்திரங்களுடன் நடிகை அஞ்சலி ராவ்

கடந்த ஜனவரி முதல் ஒளிபரப்பான இந்தத் தொடர் தற்போது 100 எபிஸோடுகளைத் தாண்டியுள்ளது. இதனை படக்குழுவினர் விமர்சையாகக் கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.